சித்தர் நெறியை அறிவோம்! உணர்வோம்!! : பதினெண் சித்தர் பீடம் அழைக்கிறது!




ஓம் குருவே போற்றி                                      ஓம் குருவே துணை                                    ஓம் குருவே எல்லாம்.
வாழ்க தமிழ்                                                                                                                                                 வளர்க சித்தர் நெறி



அன்பு வணக்கங்கள்!

இம்மண்ணுலகில் காலம் தோறும் பல உண்மைகள் பல்வேறு காரணங்களுக்காக மறக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்துள்ளன. அவை இன்றளவும் தொடர்ந்து கொண்டே உள்ளது. அவற்றில் தற்காலத்திற்கு அவசியமானவைகளை அறிந்து கொள்ளவும், அவற்றின் மீதான தங்களின் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவும் பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழின குருபீடம், மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு அருளிய, லெமூரியா (The Lost Lemuria) எனப்படும் குமரிக்கண்டத்தில் பல இலட்சம் வருடங்களுக்கு முன் தோன்றிய சிவ நெறி, சித்தர் நெறி எனும் மெய்யான இந்து மதத்தின் (ஹிந்து அல்ல) கருத்துக்களும், காலத்தால் மறக்கப்பட்ட உண்மைகளும் மக்களைச் சென்றடையும் அருட்பணியின் ஒரு சிறு பகுதியே இந்த "பதினெண் சித்தர் பீடம்" எனும் "பேஸ்புக் குழுமம்." ஆகும்.
 
https://www.facebook.com/groups/pathinennsiddharpeedam
http://arulatchi.blogspot.com
http://www.indhuvedham.org/?&sitemap
http://www.gurudevar.org
http://www.indhuism.org
  மேற்கூறிய இணைய தளங்களில் காணப்படும் கருத்துக்களும் / கட்டுரைகளும் தமிழின குருபீடம் மக்களுக்கு வெளிப்படுத்திய உண்மைகளில் ஒரு சிறிய பகுதியே, ஓர் அறிமுகம் மட்டுமே. இன்னும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அச்சேறக் காத்திருக்கின்றன.

தமிழின குருபீடத்தின் அருளுலக ஏற்புச்செல்வர், ஞானத்தந்தை முத்துராச மூர்த்தி அவர்கள் பதினெண் சித்தர் பீடத்தின், தமிழின குருபீடத்தின் மெய்யான இந்து மதம் (ஹிந்து அல்ல) பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களிடையே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், ஆர்வமுள்ளவர்களுக்கு அருளை அனுபவப்பொருளாக வழங்கியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஆனால், அவர் பேஸ்புக் மூலம் கலந்துரையாடுவதை விட நேரில் சந்திப்பதையே விரும்புகிறார். (குறைந்த பட்சமாக தொலைபேசி மூலமான அழைப்புகள் மூலம் உரையாடுவதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.)

ஆகையினால், தங்களைப்போன்ற ஒத்த கருத்துக்களை உடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது மெய்யான இந்து மதக்கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது பதினெண் சித்தர்கள் அருளிய பூசை மொழிகளை (பூசா மொழி நூல்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே சுட்டவும்) அறிந்து கொண்டு குருவின் வழிகாட்டுதலின் படி அன்றாட வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் என குறைந்தது 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக சேர்ந்து அழைக்கும் பட்சத்தில், ஞானத்தந்தை முத்துராச மூர்த்தி அவர்கள் தங்களின் வசதிக்கேற்ற இடத்திலேயே நேரில் சந்தித்து அனைத்து குழப்பங்களுக்கான தெளிவுகளும், கேள்விகளுக்கான தக்க பதிலும் அளிப்பதற்க்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

குருவழி நின்று அருளை அனுபவப்பொருளாக பெற்று, நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, நடமாடும் ஆதாரங்களாக திகழும் ஆயிரக்கணக்கான சித்தரடியார்கள், சித்தரடியான்கள் மற்றும் சித்தரடியாள்கள் போல தாங்களும் அருளை அனுபவப்பொருளாக பெற்றிடவும், இனிமையான வாழ்க்கை வாழ்ந்திடவும், பிறவிப்பயனை அடைந்திடவும் அன்புடன் அழைக்கிறோம்.

வாரீர்...! வாரீர்...! அருளதனை நிரம்பப்பெற்று வாழீர்...!!
குருவருள் துணை புரியட்டும்.


தொடர்புக்கு:
பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளை.
31, சிவசக்தி இல்லம்,
மாதவன் நகர், பருப்பூரணி கிழக்கு,
காரைக்குடி – 630 001.
Mob: 098653-25309.
E-Mail: arulatchi.info@gmail.com

4 comments:

  1. I have to join this site today onwards

    ReplyDelete
  2. அருமை அருமை...

    ReplyDelete
  3. குருநிலை அவர்கள் இலங்கைக்கிளையை செவ்வனே வழிகாட்டி தற்போது இலங்கையில் அருட்கோட்டம் அமைக்கவும் வழிசமைத்துள்ளார்.ஓம் நமசிவாய.

    ReplyDelete